சங்கீதம் 12
இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.
அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.
அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.
கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்தச் சந்ததிக்கு விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.
மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
----------------------------------------------------------
Psalm 12
God's promises are true
1 Lord, please help me!
All the good people have gone away!
No kind or faithful people remain.
2 Everybody tells lies to one another.
When they say nice things,
they do it to deceive their friends.
3 Lord, please shut their mouths!
When they deceive people or they boast,
stop them doing that!
4 They say:
‘Nobody can tell us what to do!
We will say what we like to get what we want!’
5 But the Lord says:
‘Now I will do something!
I know the cruel things that wicked people do to poor people.
When weak people cry with pain, I hear them.
So I will make them safe,
as they want me to do for them.’
6 The Lord's promises are true.
We can trust them,
because they are pure.
They are as pure as silver
that people have put in a hot fire seven times.
7 Yes Lord, you will take care of the poor people.
You will always keep each one of them safe
from all those evil people.
8 But if people praise evil things,
then wicked people will boast more and more.
----------------------------------------------------------------------------------
Description
Do not desire to live in an unstable life. Know the truth and continue the journey towards eternity..!