சங்கீதம் 21

   

சங்கீதம் 21

1
கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!
2
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.)
3
உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.
4
அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.
5
உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர்.
6
அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
7
ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
8
உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
9
உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.
10
அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.
11
அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.
12
அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்.

13
கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக்கீர்த்தனம்பண்ணுவோம்.
-------------------------------------------------------------------------------------------------------------

Psalm 21

A song to praise God for his faithful love

1 Lord, the king is happy,

because you help him with your great strength.

You have helped him to win against his enemies,

so he is very happy.

2 You have given him all the things

that he really wanted.

When he asked for them,

you have not refused to give them to him.

3 You came to him,

and you blessed him with many good things:

You put a crown on his head.

It was made from the best gold.

4 He asked you to keep his life safe,

and you gave him a long life.

His descendants will continue for ever.

5 People praise him,

because you have helped him to win against his enemies.

You have caused him to rule as a great king.

6 You will continue to bless him for ever.

Because you are very near to him,

he is very happy.

7 The king trusts in the Lord.

Because of the Most High God's faithful love,

the king will never fail.

8 You will use your great power

to take hold of your enemies.

You will catch everybody that hates you.

9 When you come out to fight against them,

you will destroy them like a hot fire.

The Lord destroys them,

because he is angry with them.

10 You will remove your enemies' children from the earth.

They will no longer have any descendants.

11 They decided to hurt you.

They thought how they would do that.

But they could not do anything bad against you.

12 No! You shoot your arrows at them,

so that they turn round and they run away!

13 Get up, Lord, and show your strength!

We will sing to praise you

because you have great power.

----------------------------------------------------------------------------

Description

Do not desire to live in an unstable life. Know the truth and continue the journey towards eternity..!



































KoodaraVaasi

நிலையில்லாத வாழ்வில் நிலைத்து வாழ ஆசைப்படாதே .! சத்தியத்தை அறிந்து கொண்டு நித்தியத்தை நோக்கி பயணத்தை தொடருங்கள் ..!

Post a Comment

Previous Post Next Post