முக்கியக் குறிப்புகள்...! * BIBLE *

📓 *B I B L E* 📓
முக்கியக் குறிப்புகள்.
_அதிகாரங்கள் வரிசைப்படி_




*ஆதியாகமம்*

ஆதி+ஆகமம்=ஆதியாகமம்.
அர்த்தம், *“ஆரம்பகாலப் பதிவு.”*

1️⃣
வானமும் பூமியும் படைக்கப்படுகின்றன (1, 2)
பூமியிலுள்ள எல்லாமே ஆறு நாட்களில் படைக்கப்படுகின்றன (3-31)
1-ஆம் நாள்: வெளிச்சம்; பகலும் இரவும் (3-5)
2-ஆம் நாள்: ஆகாயவிரிவு (6-8)
3-ஆம் நாள்: காய்ந்த தரையும், செடிகொடிகளும் (9-13)
4-ஆம் நாள்: வானத்தில் ஒளிச்சுடர்கள் (14-19)
5-ஆம் நாள்: மீன்களும், பறவைகளும் (20-23)
6-ஆம் நாள்: நிலத்தில் வாழ்கிற மிருகங்களும், மனிதர்களும் (24-31)

2️⃣ 
ஏழாம் நாளில் கடவுள் ஓய்வெடுக்கிறார் (1-3)
கடவுளாகிய யெகோவா தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தவர் (4)
ஏதேன் தோட்டத்தில் மனிதனும் மனுஷியும் (5-25)
மனிதன் மண்ணிலிருந்து உருவாக்கப்படுகிறான் (7)
தடை செய்யப்பட்ட மரம் (15-17)
பெண் உருவாக்கப்படுகிறாள் (18-25)

3️⃣
பாவத்தின் ஆரம்பம் (1-13)
முதல் பொய் (4, 5) கடவுளாகிய
யெகோவா தேவனின் பேச்சை மீறியவர்களுக்குத் தண்டனை (14-24)
பெண்ணின் சந்ததி பற்றி முன்னறிவிக்கப்படுகிறது (15)
ஏதேனிலிருந்து துரத்தப்படுகிறார்கள் (23, 24)

4️⃣
காயீனும் ஆபேலும் (1-16)
காயீனின் வம்சம் (17-24)
சேத்தும் அவருடைய மகன் ஏனோசும் (25, 26)

5️⃣
ஆதாம்முதல் நோவாவரை (1-32)
ஆதாமுக்கு மகன்களும் மகள்களும் பிறக்கிறார்கள் (4)
ஏனோக்கு கடவுளோடு நடந்தார் (21-24)

6️⃣
தேவதூதர்கள் பூமியிலுள்ள பெண்களை மனைவிகளாக ஆக்கிக்கொள்கிறார்கள் (1-3)
ராட்சதர்கள் பிறக்கிறார்கள் (4)
மனிதர்களின் மோசமான நடத்தையைப் பார்த்து கடவுளாகிய யெகோவா தேவன் வேதனைப்படுகிறார் (5-8)
பேழையைக் கட்டும்படி நோவாவிடம் சொல்கிறார் (9-16)
பெரிய வெள்ளம் வரப்போவதைப் பற்றிக் கடவுள் சொல்கிறார் (17-22)

7️⃣
பேழைக்குள் போகுதல் (1-10)
பூமியெங்கும் வெள்ளம் (11-24)

8️⃣
தண்ணீர் வடிகிறது (1-14)
புறா வெளியே விடப்படுகிறது (8-12)
பேழையிலிருந்து வெளியே வருதல் (15-19)
பூமியைப் பற்றிக் கடவுள் கொடுத்த வாக்குறுதி (20-22)

9️⃣
எல்லா மனிதர்களுக்கும் கொடுக்கப்படுகிற அறிவுரைகள் (1-7)
இரத்தத்தைப் பற்றிய சட்டம் (4-6)
வானவில் ஒப்பந்தம் (8-17)
நோவாவின் வம்சத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் (18-29)

🔟
சந்ததிகளின் பட்டியல் (1-32)
யாப்பேத்தின் வம்சம் (2-5)
காமின் வம்சம் (6-20)
நிம்ரோது கடவுளாகிய யெகோவா தேவனை எதிர்க்கிறான் (8-12)
சேமின் வம்சம் (21-31)

1️⃣1️⃣
பாபேல் கோபுரம் (1-4) கடவுளாகிய
யெகோவா தேவன் மொழியைக் குழப்புகிறார் (5-9)
சேமிலிருந்து ஆபிராம்வரை (10-32)
தேராகுவின் குடும்பம் (27)
ஊர் நகரத்தைவிட்டு ஆபிராம் புறப்படுகிறார் (31)

1️⃣2️⃣
ஆபிராம் ஆரானிலிருந்து கானானுக்குப் போகிறார் (1-9)
ஆபிராமுக்குக் கடவுள் கொடுக்கிற வாக்குறுதி (7)
எகிப்தில் ஆபிராமும் சாராயும் (10-20)

1️⃣3️⃣
ஆபிராம் கானானுக்குத் திரும்பிப் போகிறார் (1-4)
ஆபிராமும் லோத்துவும் பிரிந்து போகிறார்கள் (5-13)
ஆபிராமுக்கு மறுபடியும் கடவுளுடைய வாக்குறுதி (14-18)

1️⃣4️⃣
ஆபிராம் லோத்துவைக் காப்பாற்றுகிறார் (1-16)
ஆபிராமை மெல்கிசேதேக்கு ஆசீர்வதிக்கிறார் (17-24)

1️⃣5️⃣
ஆபிராமோடு கடவுள் செய்கிற ஒப்பந்தம் (1-21)
400 வருட அடிமைத்தனம் முன்னறிவிக்கப்படுகிறது (13)
ஆபிராமுக்கு மறுபடியும் கடவுளுடைய வாக்குறுதி (18-21)

1️⃣6️⃣
ஆகாரும் இஸ்மவேலும் (1-16)

1️⃣7️⃣
ஆபிரகாம் நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக ஆவார் (1-8)
ஆபிராமுக்கு ஆபிரகாம் என்று பெயர் வைக்கப்படுகிறது (5)
விருத்தசேதன ஒப்பந்தம் (9-14)
சாராய்க்கு சாராள் என்று பெயர் வைக்கப்படுகிறது (15-17)
ஈசாக்கு பிறப்பான் என்று வாக்குறுதி கொடுக்கப்படுகிறது (18-27)

1️⃣8️⃣
மூன்று தேவதூதர்கள் ஆபிரகாமைச் சந்திக்கிறார்கள் (1-8)
மகன் பிறப்பான் என்று சாராளுக்கு வாக்குறுதி; சாராள் சிரிக்கிறாள் (9-15)
சோதோமுக்காக ஆபிரகாம் கெஞ்சுகிறார் (16-33)

1️⃣9️⃣ 
தேவதூதர்கள் லோத்துவைச் சந்திக்கிறார்கள் (1-11)
குடும்பத்தோடு ஓடிப்போகும்படி லோத்துவிடம் சொல்லப்படுகிறது (12-22)
சோதோமும் கொமோராவும் அழிக்கப்படுகின்றன (23-29)
லோத்துவின் மனைவி உப்புச் சிலையாகிறாள் (26)
லோத்துவும் அவருடைய மகள்களும் (30-38)
மோவாபியர்கள் மற்றும் அம்மோனியர்களின் ஆரம்பம் (37, 38)

2️⃣0️⃣
அபிமெலேக்கிடமிருந்து சாராள் விடுவிக்கப்படுகிறாள் (1-18)

2️⃣1️⃣
ஈசாக்கு பிறக்கிறார் (1-7)
ஈசாக்கை இஸ்மவேல் கேலி செய்கிறான் (8, 9)
ஆகாரும் இஸ்மவேலும் வெளியே அனுப்பப்படுகிறார்கள் (10-21)
அபிமெலேக்குடன் ஆபிரகாம் செய்கிற ஒப்பந்தம் (22-34)

2️⃣2️⃣
ஈசாக்கைப் பலிகொடுக்கும்படி ஆபிரகாமிடம் சொல்லப்படுகிறது (1-19)
ஆபிரகாமின் சந்ததி மூலம் கிடைக்கும் ஆசீர்வாதம் (15-18)
ரெபெக்காளின் குடும்பம் (20-24)

2️⃣3️⃣
சாராளின் மரணமும் அவள் அடக்கம் செய்யப்படுகிற இடமும் (1-20)

2️⃣4️⃣
ஈசாக்குக்குப் பெண் தேடப்படுகிறது (1-58)
ரெபெக்காள் ஈசாக்கைச் சந்திக்கப் போகிறாள் (59-67)

2️⃣5️⃣
ஆபிரகாம் வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்கிறார் (1-6)
ஆபிரகாமின் மரணம் (7-11)
இஸ்மவேலின் மகன்கள் (12-18)
யாக்கோபும் ஏசாவும் பிறக்கிறார்கள் (19-26)
மூத்த மகனின் உரிமையை ஏசா விற்கிறான் (27-34)

2️⃣6️⃣
கேராரில் ஈசாக்கும் ரெபெக்காளும் (1-11)
கடவுளுடைய வாக்குறுதி ஈசாக்கிடம் உறுதிப்படுத்தப்படுகிறது (3-5)
கிணறுகளுக்காக வாக்குவாதம் (12-25)
அபிமெலேக்குடன் ஈசாக்கு செய்கிற ஒப்பந்தம் (26-33)
ஏசாவின் இரண்டு ஏத்திய மனைவிகள் (34, 35)

2️⃣7️⃣
ஈசாக்கிடமிருந்து யாக்கோபு ஆசீர்வாதத்தைப் பெறுகிறான் (1-29)
ஏசா ஆசீர்வாதம் கேட்கிறான், ஆனால் மனம் திருந்தவில்லை (30-40)
யாக்கோபின்மேல் ஏசாவுக்குக் கடும் கோபம் (41-46)

2️⃣8️⃣
யாக்கோபை ஈசாக்கு பதான்-அராமுக்கு அனுப்புகிறார் (1-9)
பெத்தேலில் யாக்கோபு கண்ட கனவு (10-22)
கடவுளுடைய வாக்குறுதி யாக்கோபுக்கு உறுதிப்படுத்தப்படுகிறது (13-15)

2️⃣9️⃣
யாக்கோபு ராகேலைச் சந்திக்கிறார் (1-14)
ராகேலை யாக்கோபு காதலிக்கிறார் (15-20)
லேயாளையும் ராகேலையும் யாக்கோபு கல்யாணம் செய்கிறார் (21-29)
லேயாளுக்கும் யாக்கோபுக்கும் பிறந்தவர்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா (30-35)

3️⃣0️⃣
பில்காளுக்கு தாண், நப்தலி பிறக்கிறார்கள் (1-8)
சில்பாளுக்கு காத், ஆசேர் பிறக்கிறார்கள் (9-13)
லேயாளுக்கு இசக்கார், செபுலோன் பிறக்கிறார்கள் (14-21)
ராகேலுக்கு யோசேப்பு பிறக்கிறார் (22-24)
யாக்கோபின் மந்தைகள் பெருகுகின்றன (25-43)

3️⃣1️⃣
யாக்கோபு ரகசியமாக கானானுக்குக் கிளம்புகிறார் (1-18)
லாபான் யாக்கோபைத் துரத்திக்கொண்டு போகிறார் (19-35)
லாபானோடு யாக்கோபு செய்யும் ஒப்பந்தம் (36-55)

3️⃣2️⃣
தேவதூதர்கள் யாக்கோபைச் சந்திக்கிறார்கள் (1, 2)
ஏசாவைச் சந்திக்க யாக்கோபு தயாராகிறார் (3-23)
ஒரு தேவதூதரோடு யாக்கோபு போராடுகிறார் (24-32)
யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்று பெயர் வைக்கப்படுகிறது (28)

3️⃣3️⃣
ஏசாவை யாக்கோபு சந்திக்கிறார் (1-16)
யாக்கோபு சீகேமுக்குப் போகிறார் (17-20)

3️⃣4️⃣
தீனாள் கற்பழிக்கப்படுகிறாள் (1-12)
யாக்கோபின் மகன்கள் தந்திரமாக நடந்துகொள்கிறார்கள் (13-31)

3️⃣5️⃣
யாக்கோபு பொய் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கிப்போடுகிறார் (1-4)
யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்பி வருகிறார் (5-15)
பென்யமீன் பிறக்கிறான், ராகேல் இறந்துபோகிறாள் (16-20)
இஸ்ரவேலின் 12 மகன்கள் (21-26)
ஈசாக்கின் மரணம் (27-29)

3️⃣6️⃣
ஏசாவின் வம்சம் (1-30)
ஏதோமின் ராஜாக்களும் குலத்தலைவர்களும் (31-43)

3️⃣7️⃣
யோசேப்பு கண்ட கனவுகள் (1-11)
யோசேப்பும் வயிற்றெரிச்சல்பட்ட அவனுடைய சகோதரர்களும் (12-24)
யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறான் (25-36)

3️⃣8️⃣
யூதாவும் தாமாரும் (1-30)

3️⃣9️⃣ 
போத்திபாரின் வீட்டில் யோசேப்பு (1-6)
யோசேப்பு போத்திபாருடைய மனைவியின் ஆசைக்கு அடிபணிய மறுக்கிறார் (7-20)
சிறையில் யோசேப்பு (21-23)

4️⃣0️⃣
கைதிகள் கண்ட கனவுகளின் அர்த்தத்தை யோசேப்பு சொல்கிறார் (1-19)
‘கடவுளால் மட்டும்தான் கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல முடியும்’ (8)
பார்வோனுடைய பிறந்த நாள் விருந்து (20-23)

4️⃣1️⃣
பார்வோன் கண்ட கனவுகளுக்கு யோசேப்பு அர்த்தம் சொல்கிறார் (1-36)
யோசேப்பைப் பார்வோன் உயர்த்துகிறார் (37-46அ)
யோசேப்பு உணவு நிர்வாகி ஆகிறார் (46ஆ-57)

4️⃣2️⃣
யோசேப்பின் அண்ணன்கள் எகிப்துக்குப் போகிறார்கள் (1-4)
யோசேப்பு அவருடைய அண்ணன்களைச் சந்திக்கிறார், அவர்களைச் சோதிக்கிறார் (5-25)
அவருடைய அண்ணன்கள் யாக்கோபிடம் திரும்பிப் போகிறார்கள் (26-38)

4️⃣3️⃣
யோசேப்பின் அண்ணன்கள் பென்யமீனோடு எகிப்துக்கு மறுபடியும் போகிறார்கள் (1-14)
யோசேப்பு தன் சகோதரர்களை மறுபடியும் சந்திக்கிறார் (15-23)
தன் சகோதரர்களோடு யோசேப்பு விருந்து சாப்பிடுகிறார் (24-34)

4️⃣4️⃣
பென்யமீனின் பையில் யோசேப்பின் வெள்ளிக் கோப்பை (1-17)
பென்யமீனுக்காக யூதா கெஞ்சுகிறார் (18-34)

4️⃣5️⃣
தான் யார் என்பதை யோசேப்பு சொல்கிறார் (1-15)
யோசேப்பின் சகோதரர்கள் யாக்கோபிடம் திரும்பிப் போகிறார்கள் (16-28)

4️⃣6️⃣
யாக்கோபு குடும்பத்தோடு எகிப்துக்குக் குடிமாறிப் போகிறார் (1-7)
எகிப்துக்குக் குடிமாறிப் போகிறவர்களின் பெயர்கள் (8-27)
கோசேனில் யோசேப்பு யாக்கோபைச் சந்திக்கிறார் (28-34)

4️⃣7️⃣
யாக்கோபு பார்வோனைச் சந்திக்கிறார் (1-12)
யோசேப்பு உணவு வழங்கும் பொறுப்பை ஞானமாகச் செய்கிறார் (13-26)
கோசேனில் இஸ்ரவேல் குடியேறுகிறார் (27-31)

4️⃣8️⃣
யோசேப்பின் இரண்டு மகன்களையும் யாக்கோபு ஆசீர்வதிக்கிறார் (1-12)
எப்பிராயீமுக்கு அதிக ஆசீர்வாதம் கிடைக்கிறது (13-22)

4️⃣9️⃣ 
மரணப் படுக்கையில் யாக்கோபு தீர்க்கதரிசனம் சொல்கிறார் (1-28)
யூதாவிலிருந்து ஷைலோ (இரட்சகர்) வருவார் (10)
தன்னை எங்கே அடக்கம் செய்ய வேண்டுமென்று யாக்கோபு சொல்கிறார் (29-32)
யாக்கோபின் மரணம் (33)

5️⃣0️⃣ 
யாக்கோபை யோசேப்பு கானானில் அடக்கம் செய்கிறார் (1-14)
சகோதரர்களை மன்னித்துவிட்டதாக யோசேப்பு உறுதியளிக்கிறார் (15-21)
யோசேப்பின் இறுதி நாட்களும் மரணமும் (22-26)
தன் எலும்புகளை என்ன செய்ய வேண்டுமென்று யோசேப்பு சொல்கிறார் (25)
◾◼️◼️▪️▪️◼️◼️◾

Post a Comment

Previous Post Next Post