சங்கீதம் 14தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.
சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்லி, நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள்.
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
-----------------------------------------------------------
Psalm 14
God rules the world
1 Only fools say to themselves, ‘There is no God.’
People like that do bad and evil things.
None of them do things that are good and right.
2 The Lord is looking down from heaven.
He looks at the people of the world,
to see if there are any wise people among them.
He looks to see if anyone wants to know God.
3 But everyone has turned away from God.
They have all become evil.
Not even one person does things that are right!
4 Will those evil people never learn?
They destroy my people,
as if they are eating a meal.
They never pray to the Lord.
5 Look at them! Now they are very afraid!
They see that God is with the people who obey him.
6 You wicked people tried to bring shame to poor people.
But the Lord keeps poor people safe.
7 The Lord is the one who can save Israel's people.
Please Lord, come now from your home in Zion!
When the Lord makes his people strong again,
Jacob's descendants will be happy!
Yes, Israel's people will shout with joy!
-----------------------------------------------------------------------------------
Description
Do not desire to live in an unstable life. Know the truth and continue the journey towards eternity..!