கனடாவில் மீண்டுமொரு 'ஏ.ஆர்.ரஹ்மான் தெரு' - இசைப் புயலின் உருக்கமான பதிவு

ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை கனடாவில் உள்ள ஒரு தெருவிற்கு வைத்து கௌரவித்துள்ளது அந்த நாட்டு அரசு.

இந்திய சினிமாவின் மிகப்பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆங்கிலப் படங்களுக்கும் இசையமைத்து, இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்று உலகம் முழுக்க பிரபலமான நபராக இருக்கிறார். இந்நிலையில் கனடா நாட்டின் Markham என்ற நகரத்தின் தெருவிற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ல் ஒரு முறை இதே Markham நகரின் வேறு ஒரு தெருவிற்கு அல்லா ரக்கா ரஹ்மான் என அவரது பெயரை ஏற்கனவே வைத்தனர். தற்போது இரண்டாவது முறையாக அவரது பெயர் ஒரு தெருவிற்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு நிகழ்வையும் ஏற்பாடு செய்து கலை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் Markham நகரத்தினர்.

இந்நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான பாடல்களை பாடியும், இசைக்கருவிகளில் இசைத்தும் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவித்திருக்கிறார்கள். மேலும் இந்த நிகழ்வில் Markham நகர மக்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

image

“இப்படியான ஒன்றை என் வாழ்வில் நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. Markham நகரத்து மேயருக்கும், கனடா மற்றும் இந்திய மக்களுக்கு என் நன்றி. ஏ.ஆர்.ரஹ்மான் என்பது எனது பெயரல்ல, அதற்கு கருணை என்று பொருள். இந்தக் கருணைதான் கடவுளை நோக்கி பயணிக்கும் அனைவருக்கும் முக்கியமான தகுதி. எனவே இந்தப் பெயர், அமைதியையும் மகிழ்ச்சியையும், ஆரோக்யத்தையும் கனட நாட்டு மக்களுக்கு அளிக்கட்டும்” எனப் பேசி தன் இசைப் பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

தற்போது கனடாவின் டொரண்டோவில் இசைக் கட்சேரியை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அதிலும் ‘காதல் தேசம்’ படத்தின் பிரபலமான முஸ்தஃபா முஸ்தஃபா என்ற பாடலைப் பாடினார். மேலும் ‘ஸ்வதேஸ்’ படத்தில் இடம் பெற்ற உந்தன் தேசத்தின் குரல் பாடலையும் பாட, தமிழ் ரசிகர்கள் கொண்டாட்டமாக அதைக் கேட்டு ரசித்திருக்கிறார்கள்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/q3E5eoP

Post a Comment

Previous Post Next Post