அமெரிக்காவின் அலபாமா நகரில், கேரளாவின் திருவல்லா பகுதியைச் சேர்ந்த மரியம் சூசன் மேத்யூ என்ற 19 வயது இளம் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அலபாமா நகரில் உள்ள தனது வீட்டில் மரியம் சூசன் மேத்யூ தூங்கிக் கொண்டிருந்தபோது, மேல் தளத்தில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த நபரே சுட்டுக்கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, இது தொடர்பாக மாண்ட்கோமெரி காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்தக் கொலையை பற்றி தென்மேற்கு அமெரிக்காவின் மலங்கரா ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தை சேர்ந்த அருட்தந்தை ஜான்சன் பாப்பச்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரியம் சூசன் மேத்யூ தனது வீட்டின் மேல் தளத்தில் வசிப்பவரின் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறினார், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மரியம் சூசன் மேத்யூ கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள நிரணம் பகுதியைச் சேர்ந்த போபன் மேத்யூவின் மகள். சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்து அவரின் உடலை கேரளா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 7 நாட்களில் மாண்ட்கோமரி பகுதியில் நடக்கும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். முன்னதாக, கடந்த வியாழக்கிழமை அன்று ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மாத தொடக்கத்திலும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாஜன் மேத்யூ என்பவர் 15 வயது சிறுவனால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைப்படிக்க...”உலகம் அச்சப்படும் அளவுக்கு ஓமிக்ரான் ஆபத்தானதல்ல” - தென்னாப்பிரிக்க மருத்துவர் தகவல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3I2Yg3r